என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாராளுமன்றம் கூடுகிறது
நீங்கள் தேடியது "பாராளுமன்றம் கூடுகிறது"
இலங்கை பாராளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூடுகிறது என அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLanka #Parliment #Maithripalasirisena
கொழும்பு:
இலங்கை அதிபராக பதவி வகிக்கும் மைத்ரிபால சிறிசேனா, பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கினார்.
மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் பாராளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார்.
அதிபரின் இந்த முடிவுக்கு ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்தி வந்தம.
இதற்கிடையே, இலங்கை பாராளுமன்றம் 7-ம் தேதி கூடும் என தகவல் வெளியானது. ஆனாலும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதால் பாராளுமன்றம் கூடுவதில் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், இலங்கை பாராளுமன்றம் 14-ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவரது செயலாளர் உதய சேனவிரத்னே மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதிபரின் இந்த உத்தரவால் இலங்கை பாராளுமன்றம் கூடுவதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. #SriLanka #Parliment #Maithripalasirisena
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X